திருவண்ணாமலை

கிராமம்தோறும் பட்டா மாறுதல் முகாம் நடத்தக் கோரிக்கை

DIN

கிராமம்தோறும் பட்டா மாறுதல் முகாம் நடத்தக் கோரி என்.எம்.ஆர். உழவர் பேரவை சார்பில், வந்தவாசி வட்டாட்சியர் அலுவலகம் அருகே புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில், மத்திய அரசு வழங்கும் ரூ.6 ஆயிரம் உதவித்தொகையை விவசாயிகள் பெற தனிநபர் பட்டா தேவைப்படுவதால் கிராமம்தோறும் பட்டா மாறுதல் முகாம் நடத்த வேண்டும், மத்திய அரசு போல, மாநில அரசும் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6 
ஆயிரம் உதவித்தொகை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்டத் தலைவர் ரிஸ்வான் தலைமை வகித்தார். மாநில செய்தி தொடர்பாளர் வாக்கடை புருஷோத்தமன், வட்டாரத் தலைவர் மணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

லக்னௌ அணிக்கு 145 ரன்கள் இலக்கு நிர்ணயித்த மும்பை இந்தியன்ஸ்!

லண்டனில் பலரை வெட்டிய இளைஞர் கைது!

பறக்கும் முத்தத்தால் வந்த வினை; கேகேஆர் வீரருக்கு ஒரு போட்டியில் விளையாடத் தடை!

ஹமாஸ் அழிக்கப்படும் வரை போர் தொடரும்: நெதன்யாகு சூளுரை!

ஏற்காட்டில் பேருந்து விபத்து : 4 பேர் பலி

SCROLL FOR NEXT