திருவண்ணாமலை

சிறப்பு சொற்பொழிவு

DIN

வந்தவாசியை அடுத்த தெள்ளாறு நல்லோர் வட்டம் சார்பில் சிறப்பு சொற்பொழிவு தெள்ளாறு திருஞானசம்பந்தர் மடத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. 
நிகழ்ச்சிக்கு ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர் டி.எ.அகஸ்தியப்பன் தலைமை வகித்தார். சேனல் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் டி.ஈ.ஏழுமலை முன்னிலை வகித்தார்.
ராமாயணத்தில் சகோதர பாசம் என்ற தலைப்பில் திருவண்ணாமலை திருக்குறள் தொண்டு மைய நிறுவனர் ப.குப்பன் சிறப்புரை ஆற்றினார். மேலும், பத்தாம் வகுப்பு, பிளஸ்-2 பொதுத்தேர்வில் தமிழ் பாடத்தில் சிறப்பிடம் பெற்ற அந்தப் பகுதி மாணவர்களுக்கு அவர் பரிசுகளை வழங்கினார். புலவர் ந.பானு நன்றி தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

“நான்_முதல்வன்” திட்டம் - முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்

கறுப்புப் பூனை...!

ரே பரேலியில் ராகுல் காந்தி வேட்புமனுத் தாக்கல்!

ப்ளே ஆஃப் வாய்ப்பை உறுதி செய்யுமா கொல்கத்தா?

பயப்பட வேண்டாம், ஓட வேண்டாம்: யாரைச் சொல்கிறார் மோடி?

SCROLL FOR NEXT