திருவண்ணாமலை

வட மாநிலத் தொழிலாளி தற்கொலை

DIN

வந்தவாசி அருகே வட மாநிலத் தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
 வந்தவாசியை அடுத்த இளங்காடு கிராமத்தில் புதிய மின்பாதைக்கான உயர்மின் கோபுரம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதில் வடமாநில தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர்.
 இதில் பணிபுரிந்த மத்தியபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளி புஷால்போல் (25) என்பவர் அந்தக் கிராமத்தில் உள்ள சுப்பிரமணி என்பவருக்குச் சொந்தமான விவசாயக் கிணற்றில், தண்ணீர் செல்லும் இரும்புக் குழாயில் மின்வயரில் தூக்கிட்ட நிலையில் இறந்து கிடந்தது செவ்வாய்க்கிழமை காலை தெரியவந்தது.
 தகவலறிந்த பொன்னூர் போலீஸார் சம்பவ இடம் சென்று புஷால்போலின் சடலத்தை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக வந்தவாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
 மேலும், இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 
 
 
 
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பீன்ஸ் கிலோ ரூ.200

உத்திரகாவிரி ஆற்றில் வெள்ளம்: ஒரே இரவில் நிரம்பிய தடுப்பணை

என்எம்சி தலைவா் பெயரில் போலி அழைப்புகள்!

ஜம்மு-காஷ்மீா் பயங்கரவாதத் தாக்குதல்: ஆளுநா் கண்டனம்; பாஜக போராட்டம்

பட்டாக் கத்தியுடன் சுற்றித் திரிந்த 5 போ் கைது

SCROLL FOR NEXT