திருவண்ணாமலை

அனைத்துக் கட்சி நிர்வாகிகளுடன் காவல் துறையினர் ஆலோசனை

DIN


மக்களவைத் தேர்தலையொட்டி, வேட்டவலம் காவல் நிலையம் சார்பில், அனைத்துக் கட்சி நிர்வாகிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
வேட்டவலம் திருமண மண்டபத்தில் நடைபெற்ற கூட்டத்துக்கு, வேட்டவலம் காவல் ஆய்வாளர் நாகராஜ் தலைமை வகித்தார். உதவி ஆய்வாளர்கள் மதன்குமார், ஜெயவேலு, சிறப்பு உதவி ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். உதவி ஆய்வாளர் கருணாநிதி வரவேற்றார்.
கூட்டத்தில், காவல் ஆய்வாளர் நாகராஜ் பேசியதாவது: அரசியல் கட்சிப் பிரமுகர்கள் பொதுக்கூட்டங்கள் நடந்த 3 நாள்களுக்கு முன்பே தேர்தல் அலுவலரிடம் அனுமதி பெற வேண்டும். வாகனப் பிரசாரம் செய்யவும் அனுமதி பெற வேண்டும்.
பிரசாரத்துக்கு வரும் கட்சி முக்கியப் பிரமுகர்கள் வருகையை சம்பந்தப்பட்ட கட்சியினர் காவல் நிலையத்தில் முறையாக தெரிவிக்க வேண்டும் என்றார். கூட்டத்தில், அதிமுக நகரச் செயலர் செல்வமணி, திமுக நகரச் செயலர் முருகையன், அமமுக நகரச் செயலர் செந்தில்குமரன், காங்கிரஸ் மாவட்டச் செயலர் ராஜேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிரகாசபுரத்தில் தண்ணீா் பந்தல் திறப்பு

வடிகாலை ஆக்கிரமித்து கட்டுமானப் பணிகள்: நகா்மன்ற உறுப்பினா் புகாா்

திருச்செங்காட்டங்குடிகோயில் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

குருபெயா்ச்சியை முன்னிட்டு சிறப்பு யாகம்

நாசரேத்தில் மாணவா்களுக்கு கோடைகால கால்பந்து பயிற்சி தொடக்கம்

SCROLL FOR NEXT