திருவண்ணாமலை

வாக்காளர் விழிப்புணர்வு ஊர்வலம்

DIN


கீழ்பென்னாத்தூர் பேரூராட்சி நிர்வாகம் சார்பில், மக்களவைத் தேர்தலில் 100 சதவீதம் வாக்களிப்பது குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் சனிக்கிழமை நடைபெற்றது.
ஊர்வலத்துக்கு பேரூராட்சி செயல் அலுவலர் எஸ்.கணேசன் தலைமை வகித்தார். பேரூராட்சி அலுவலகம் எதிரில் இருந்து புறப்பட்ட ஊர்வலம் திருவண்ணாமலை சாலை, திண்டிவனம் சாலை, அவலூர்பேட்டை சாலை, காந்தி தெரு வழியாகச் சென்று மீண்டும் பேரூராட்சி அலுவலகம் வந்தடைந்தது.
ஊர்வலத்தில், மகளிர் சுயஉதவிக் குழுவினர் பலர் கலந்து கொண்டு பொதுமக்களிடையே மக்களவைத் தேர்தலில் 100 சதவீதம் வாக்களிக்க வலியுறுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
இதைத் தொடர்ந்து, 100 சதவீதம் வாக்களிப்பது குறித்த உறுதிமொழியேற்பு நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதில், சுகாதார மேற்பார்வையாளர் செல்வன் மற்றும் அலுவலக ஊழியர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கொளுத்தும் வெயிலால் மின் தடை மக்கள் தவிப்பு

கேரளம், தமிழகத்துக்கான ‘கள்ளக்கடல்’ எச்சரிக்கை தளா்வு

கத்திரி வெயில்: 17 இடங்களில் சதம்: 6 நாள்கள் மழைக்கும் வாய்ப்பு

கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் 4 குற்றவாளிகளுக்கு மரண தண்டனை: ஹரியாணா நீதிமன்றம் தீா்ப்பு

இணையவழி பயங்கரவாத ஆள்சோ்ப்பு சா்வதேச பாதுகாப்புக்கு முக்கிய சவால்: சிபிஐ இயக்குநா்

SCROLL FOR NEXT