திருவண்ணாமலை

திருக்கல்யாண உத்ஸவம்

DIN

வந்தவாசியில் அமைந்துள்ள ஸ்ரீ ரங்கநாயகி சமேத ஸ்ரீ ரங்கநாதப் பெருமாள் கோயிலில் பிரம்மோத்ஸவத்தையொட்டி, திருக்கல்யாணம், கருட சேவை உத்ஸவம் ஆகியவை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன.
 இதையொட்டி, காலை சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், திருமஞ்சன சேவை ஆகியவை நடைபெற்றன.
 பின்னர், மோகினி அலங்காரத்தில் பல்லக்கு உத்ஸவம் நடைபெற்றது. இரவு சுவாமியின் திருக்கல்யாண உத்ஸவம் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து கருட வாகனத்தில் சுவாமி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
 உத்ஸவத்தில் ஸ்ரீமந் நாதமுனி வைஷ்ணவ சபை செயலர் கு.மணிவண்ணன், ஓய்வு பெற்ற சார் ஆய்வாளர் கு.பாண்டுரங்கன், ஸ்ரீகிருஷ்ணா கல்வி மையத்தின் முதல்வர் பா.சீனிவாசன் உள்ளிட்ட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோடைக்கால பயிற்சி வகுப்புக்கு கட்டணம்- எடப்பாடி பழனிசாமி கண்டனம்

சமந்தாவின் புதிய படம்!

நீல நிலவே....திவ்யா துரைசாமி!

மணிப்பூரில் இரண்டு குழுக்களுக்கிடையே மீண்டும் துப்பாக்கிச்சண்டை: கிராம மக்கள் அச்சம்

கைகளில் செம்புடன் கர்நாடக முதல்வர் தலைமையில் அமைச்சர்கள் தர்னா

SCROLL FOR NEXT