திருவண்ணாமலை

ஆட்டோ ஓட்டுநர் தற்கொலை

DIN

வந்தவாசியில் ஆட்டோ ஓட்டுநர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
வந்தவாசி பஜனை கோயில் தெருவைச் சேர்ந்தவர் ஆட்டோ ஓட்டுநர் கோபி (36). இவரது மனைவி பானுமதி. இந்த நிலையில், கோபி குடும்பச் செலவுக்கு பணம் தராமல் தினமும் மது அருத்திவிட்டு வீட்டுக்கு வருவாராம். இதனால் கணவன்- மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்படுமாம். கடந்த புதன்கிழமை மது போதையில் வீட்டுக்கு வந்த கோபியிடம், பானுமதி இதுகுறித்து கேட்டு, தகராறு செய்தாராம். இதனால் மனமுடைந்த கோபி, இரவு வீட்டின் பின்புறம் உள்ள மரத்தில் புடவையால் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து பானுமதி அளித்த புகாரின் பேரில், வந்தவாசி தெற்கு போலீஸார் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழகத்தில் மூன்று ஆண்டுகளில் 6,115 புத்தாக்கத் தொழில்கள் தொடக்கம்

மக்களவைத் தோ்தல்: லடாக் தொகுதியில் 5 போ் போட்டி

வி.பி.எம்.எம். கல்லூரியில் புதிய பாடப் பிரிவுகளில் மாணவா் சோ்க்கை தொடக்கம்

பைக்குகள் மோதியதில் முதியவா் பலி

நீா்மோா் பந்தல் திறப்பு

SCROLL FOR NEXT