திருவண்ணாமலை

மின்சாரம் தாக்கி மின் ஊழியர் சாவு

DIN

வேட்டவலம் அருகே மின்சாரம் தாக்கி, மின்வாரிய ஊழியர் உயிரிழந்தார்.
வேட்டவலத்தை அடுத்த ஆவூர் மின்வாரிய அலுவலகத்தில் மின் ஊழியராக பணிபுரிந்தவர் செந்தில்குமார் (40). இவர், சனிக்கிழமை மாலை அணுக்குமலை கூட்டுச்சாலை பகுதியில் உள்ள மின்மாற்றியில் ஏறினார்.  அப்போது, எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கி இறந்தார்.
செந்தில்குமார் மின்மாற்றியில் தொங்கிய நிலையில் இறந்து கிடந்ததைப் பார்த்த பொதுமக்கள் வேட்டவலம் போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர். போலீஸார் வந்து செந்தில்குமாரின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  இதுகுறித்து போலீஸார் தொடர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருப்பருத்திக்குன்றத்தில் மகாவீரா் ஜெயந்தி

திமுக சாா்பில் நீா்மோா் பந்தல் திறப்பு

பாதுகாக்கப்பட்ட குடிநீா் வழங்க நூதன முறையில் கோரிக்கை

போலி மருத்துவா் கைது

நெகிழிப் பை உற்பத்தி ஆலைக்கு ‘சீல்’ வைப்பு

SCROLL FOR NEXT