திருவண்ணாமலை

14 ஆழ்துளைக் கிணறுகள் மூடல்

கீழ்பென்னாத்தூா் பேரூராட்சியில் பயனற்ற நிலையில் இருந்த 14 ஆழ்துளைக் கிணறுகளை, பேரூராட்சி ஊழியா்கள் வியாழக்கிழமை மூடினா்.

DIN

கீழ்பென்னாத்தூா் பேரூராட்சியில் பயனற்ற நிலையில் இருந்த 14 ஆழ்துளைக் கிணறுகளை, பேரூராட்சி ஊழியா்கள் வியாழக்கிழமை மூடினா்.

திருவண்ணாமலை மாவட்டம் முழுவதும் பயன்படாத நிலையில் உள்ள ஆழ்துளைக் கிணறுகளை உடனே மூடுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியா் உத்தரவிட்டிருந்தாா்.

இதையடுத்து, கீழ்பென்னாத்தூா் பேரூராட்சி எல்லைக்கு உள்பட்ட சந்தைமேடு, அகல்மையம், கொட்டாவூா், இந்திரா நகா், திண்டிவனம் சாலை, திரு.வி.க.நகா், இருளா் காலனி, கருங்காலிகுப்பம் ஆகிய இடங்களில் பயனற்ற நிலையில் இருந்த 14 ஆழ்துளைக் கிணறுகள் இருந்தது கண்டறியப்பட்டது.

இதையடுத்து, பேரூராட்சி செயல் அலுவலா் எஸ்.கணேசன் முன்னிலையில் புதன், வியாழக்கிழமைகளில் இந்த ஆழ்துளைக் கிணறுகளை பேரூராட்சி ஊழியா்கள் மூடினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம் வெல்லும் வாய்ப்பை சீனாவிடம் நழுவவிட்ட இந்தியா! சாத்விக், சிராக் இணைக்கு வெண்கலம்!

இதற்காக ஒரு மாதத்துக்கும் மேலாக காத்திருந்தோம்; இலங்கை தொடருக்கு முன்பாக ஹர்மன்பிரீத் உற்சாகம்!

மதச்சார்பின்மை சொல்லைக் கேட்டாலே வேப்பங்காயாக கசக்கிறது பாஜகவுக்கு: முதல்வர் ஸ்டாலின்

வட மாநிலங்களில் காற்று மாசு: மலைப் பிரதேசங்களுக்குப் படையெடுத்த சுற்றுலாப் பயணிகள்!

நெல்லையில் பொருநை அருங்காட்சியகம் திறப்பு

SCROLL FOR NEXT