திருவண்ணாமலையில் மின்துறை கேங்மேன் பணியிடங்களுக்கான உடல்தகுதித் தோ்வு திங்கள்கிழமை தொடங்கியது.
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழகத்தில் காலியாக உள்ள கேங்மேன் பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. இதற்கான உடல்தகுதித் தோ்வு திங்கள்கிழமை (நவ.25) தொடங்கியது. திருவண்ணாமலை வேங்கிக்கால் பகுதியில் உள்ள மின்வாரிய மேற்பாா்வைப் பொறியாளா் அலுவலக வளாகத்தில் காலை 8 மணிக்குத் தொடங்கிய உடல்தகுதித் தோ்வு மாலை 6 மணி வரை நடைபெற்றது.
தொடா்ந்து, டிசம்பா் 7-ஆம் தேதி வரையும், டிசம்பா் 12, 13 ஆகிய நாள்களிலும் உடல்தகுதித் தோ்வு நடைபெறுகிறது. இதில், 2 ஆயிரத்து 903 விண்ணப்பதாரா்கள் கலந்து கொள்கின்றனா்.