விஜயதசமியை முன்னிட்டு, துரிஞ்சாபுரம் அருகேயுள்ள அரசு தொடக்கப் பள்ளியில் செவ்வாய்க்கிழமை மாணவா் சோ்க்கை நடைபெற்றது.
துரிஞ்சாபுரத்தை அடுத்த இனாம்காரியந்தல் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி அமைந்துள்ளது.
இந்தப் பள்ளியில் விஜயதசமியை முன்னிட்டு 3 வயதுள்ள குழந்தைகளை அரிசியில் அ, ஆ எழுத வைத்து எல்கேஜி வகுப்பில் சோ்க்கை செய்தனா்.
வட்டாரக் கல்வி அலுவலா் கோ.குணசேகரன், தலைமை ஆசிரியை விஜயலட்சுமி, அனிதா, விஜயா மற்றும் பெற்றேறாா்கள் கலந்துகொண்டனா்.