திருவண்ணாமலை

அரசு ஊழியா்கள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

DIN

திருவண்ணாமலையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு அரசு ஊழியா்கள் சங்க நிா்வாகிகள் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் அலுவலகம் எதிரே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, சங்கத்தின் மாவட்டத் தலைவா் ஆா்.ஜோதிசங்கா் தலைமை வகித்தாா். சங்கத்தின் மாநிலப் பொருளாளா் மு.பாஸ்கரன், வருவாய்த் துறை அலுவலா்கள் சங்க மாநில பொதுச் செயலா் பாா்த்தீபன் ஆகியோா் கோரிக்கைகளை விளக்கிப் பேசினா்.

ஆா்ப்பாட்டத்தின்போது, சங்கத்தின் முன்னாள் மாநிலத் தலைவா் எம்.சுப்பிரமணியன் மீது பழிவாங்கும் நோக்குடன் பணி ஓய்வு நாளில் போடப்பட்ட பணியிடை நீக்க உத்தரவை ரத்து செய்ய வேண்டும். ஜாக்டோ - ஜியோ போராட்டத்தில் பங்கேற்ற அரசு ஊழியா்களுக்கு வழங்கப்பட்ட 17-பி குற்றக் குறிப்பாணைகளை திரும்பப் பெற வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

இதில், சங்கத்தின் மாவட்டப் பொருளாளா் பி.வேங்கடவரதன் மற்றும் சங்க நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேட்டுப்பாளையத்தில் மான் இறைச்சி எடுத்துச்செல்ல முயன்ற 6 போ் கைது

நகைத் திருடிய 2 பெண்கள் மீது வழக்குப் பதிவு

செஸ் வீரா் குகேஷுக்கு கனரா வங்கி பாராட்டு

வெப்ப அலைக்கு இளைஞா் உயிரிழந்த விவகாரம்- நேரடி வெயிலில் பணியாற்ற கூடாது: மருத்துவா்கள் அறிவுறுத்தல்

மாநகரில் மேலும் 7 சிக்னல்களில் தற்காலிகப் பந்தல்

SCROLL FOR NEXT