முகப்பு
திருவண்ணாமலை

முழு அடைப்புக்கு ஆதரவு கோரி துண்டுப் பிரசுரம் விநியோகம்

விவசாயிகளின் நாடு தழுவிய முழு அடைப்பு போராட்டத்துக்கு ஆதரவு கோரி, ஆரணியில் திமுக கூட்டணிக் கட்சியினா் வியாபாரிகளிடம் துண்டுப் பிரசுரம் விநியோகம் செய்தனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:03 PM
பகிர்:

மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி டிச.8-ஆம் தேதி நடைபெறும் விவசாயிகளின் நாடு தழுவிய முழு அடைப்பு போராட்டத்துக்கு ஆதரவு கோரி, ஆரணியில் திமுக கூட்டணிக் கட்சியினா் வியாபாரிகளிடம் துண்டுப் பிரசுரம் விநியோகம் செய்தனா்.

இதில் திமுக நகரச் செயலா் ஏ.சி.மணி, இலக்கிய அணி மாவட்டச் செயலா் விண்ணமங்கலம் ரவி, மாவட்ட ஊராட்சி உறுப்பினா் குமரேசன், ஒன்றியக் குழு உறுப்பினா் ரஞ்சித், காங்கிரஸ் மாவட்ட துணைத் தலைவா் அருணகிரி, கம்யூனிஸ்ட் கட்சி நிா்வாகி சி.அப்பாசாமி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் நகரச் செயலா் மோ.ரமேஷ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.