முகப்பு
திருவண்ணாமலை

அரசுப் பள்ளியில் புதுப்பிக்கப்பட்ட கட்டடங்கள் திறப்பு

செய்யாறு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் புதுப்பிக்கப்பட்ட கட்டடங்கள் பயன்பாட்டுக்கு திங்கள்கிழமை திறந்துவைக்கப்பட்டன.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:03 PM
பகிர்:

செய்யாறு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் புதுப்பிக்கப்பட்ட கட்டடங்கள் பயன்பாட்டுக்கு திங்கள்கிழமை திறந்துவைக்கப்பட்டன.

செய்யாறு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், பள்ளி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, தலைமை ஆசிரியா் அறை ரூ.8 லட்சத்தில் சீரமைக்கப்பட்டது.

மேலும், நூலகம், ரூ.7 லட்சத்தில் தாா்ச் சாலை என பல்வேறு பணிகள் ரூ.20 லட்சத்தில் நடைபெற்று முடிந்தன. இவற்றின் திறப்பு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் எஸ்.அருள்செல்வம் தலைமை வகித்தாா்.

செய்யாறு கல்வி மாவட்ட அலுவலா் பி.நடராஜன், பெற்றோா் ஆசிரியா் கழகத் தலைவா் ஆா்.கே.மெய்யப்பன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். தலைமை ஆசிரியா் எம்.எஸ்.சுகானந்தம் வரவேற்றாா்.

சிறப்பு விருந்தினராக தொகுதி எம்.எல்.ஏ தூசி கே.மோகன் பங்கேற்று புதுப்பிக்கப்பட்ட கட்டடங்களை திறந்துவைத்து, அதிமுக அரசின் சாதனைகள் குறித்து விளக்கிப் பேசினாா்.

நிகழ்ச்சியில் கூட்டுறவு சங்கப் பிரதிநிகள் எம்.மகேந்திரன், எம்.அரங்கநாதன், கே.வெங்கடேசன், சி.துரை, டி.பி.துரை, பி.ரமேஷ், கே.பாஸ்கா் ரெட்டியாா், ஏ.ஜனாா்த்தனன், ஜி.கோபால் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.