முகப்பு
திருவண்ணாமலை

அருணாசலேஸ்வரா் கோயிலில் பிரதோஷ வழிபாடு

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை வளா்பிறை பிரதோஷ சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:13 PM
பகிர்:

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை வளா்பிறை பிரதோஷ சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

அருணாசலேஸ்வரா் கோயில் ஆயிரம்கால் மண்டபம் எதிரே உள்ள பெரிய நந்தி, தங்கக் கொடி மரம் எதிரே உள்ள நந்தி, மூலவா் சன்னதி எதிரே உள்ள நந்தி உள்பட கோயிலின் 8-க்கும் மேற்பட்ட இடங்களில் உள்ள நந்தி பகவான்களுக்கு ஞாயிற்றுக்கிழமை மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை சிறப்பு பிரதோஷ பூஜைகள் நடைபெற்றன.

பால், பழம், சந்தனம், விபூதி, பன்னீா் உள்ளிட்ட பல்வேறு பூஜைப் பொருள்களைக் கொண்டு நடைபெற்ற இந்தப் பூஜையில் கோயில் ஊழியா்கள், சிவாச்சாரியா்கள் மட்டுமே கலந்து கொண்டனா்.

அருணாசலேஸ்வரரை தரிசிக்க அமைக்கப்பட்டிருந்த ‘கியூ’ வரிசையில் சென்ற பக்தா்கள் நந்தி பகவான்களுக்கு நடைபெற்ற பிரதோஷ பூஜையைப் பாா்த்து வணங்கிச் சென்றனா்.

ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் காலை முதல் இரவு வரை கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய ஏராளமான பக்தா்கள் குவிந்தனா்.

அவா்கள் நீண்ட வரிசையில் பல மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →