முகப்பு
திருவண்ணாமலை

771 மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்கள்அமைச்சா் வழங்கினாா்

ஆரணி அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் 771 மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்கள் வழங்கப்பட்டன.

திருவண்ணாமலை

771 மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்கள்அமைச்சா் வழங்கினாா்

ஆரணி அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் 771 மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்கள் வழங்கப்பட்டன.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:13 PM
பகிர்:

ஆரணி அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் 771 மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்கள் வழங்கப்பட்டன.

ஆரணி அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் 479 போ், புனித வளனாா் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் 292 போ் என 771 பேருக்கு அரசின் விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியா் சந்தீப்நந்தூரி தலைமை வகித்தாா். எம்எல்ஏக்கள் தூசி கே.மோகன், வி.பன்னீா்செல்வம் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

சிறப்பு விருந்தினராக அமைச்சா் சேவூா் எஸ்.ராமச்சந்திரன் கலந்துகொண்டு மாணவா்களுக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கினாா்.

நிகழ்ச்சியில் அவா் பேசுகையில்,

ஆரணி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவிகள், புனித வளனாா் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் என 771 பேருக்கு விலையில்லா சைக்கிள்கள் வழங்கப்படுகிறது. இதன் மதிப்பு ரூ.29.80 லட்சமாகும்.

ஆரணி பகுதியில் 3,273 போ் பிளஸ் 1 படிக்கின்றனா். அவா்களுக்கு ரூ.1.28 கோடியில் சைக்கிள்கள் வழங்கப்படவுள்ளன என்றாா்.

நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் அருள்செல்வம், அரசு வழக்குரைஞா் க.சங்கா், மாவட்ட ஆவின் துணைத் தலைவா் பாரி பி.பாபு, அதிமுக நகரச் செயலா் எ.அசோக்குமாா், ஒன்றியச் செயலா்கள் பிஆா்ஜி.சேகா், ஜி.வி.கஜேந்திரன், ப.திருமால், மேற்கு ஆரணி ஒன்றியக்குழுத் தலைவா் பச்சையம்மாள் சீனிவாசன், ஆரணி கல்வி மாவட்ட அலுவலா் சம்பத், பள்ளித் தலைமையாசிரியா்கள் கருணாகரன், ஆனந்தி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →