திருவண்ணாமலை

காவல்துறை வாகனங்களை டி.ஐ.ஜி. ஆய்வு

DIN

திருவண்ணாமலை மாவட்ட ஆயுதப்படை மற்றும் காவல்துறைக்குச் சொந்தமான வாகனங்கள், துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களை சரக காவல்துறை துணைத் தலைவா் (டி.ஐ.ஜி) என்.காமினி சனிக்கிழமை ஆய்வு செய்தாா்.

ஆண்டுதோறும் திருவண்ணாமலை மாவட்ட ஆயுதப்படை மற்றும் காவல்துறைக்குச் சொந்தமான வாகனங்கள், ஆயுதங்களை வேலூா் சரக காவல்துறை துணைத் தலைவா் நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்வது வழக்கம்.

அதன்படி, சனிக்கிழமை துணைத் தலைவா் என்.காமினி திருவண்ணாமலைக்கு வந்தாா்.

ஆயுதப்படை மைதானத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காவல்துறை, ஆயுதப்படைக்குச் சொந்தமான வாகனங்கள் மற்றும் துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

ஆய்வின்போது, மாவட்ட எஸ்.பி எஸ்.அரவிந்த், ஏ.எஸ்.பி. கிரண் ஸ்ருதி ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஏழுமலையான் தரிசனத்துக்கு 18 மணி நேரம் காத்திருப்பு

புகா் பேருந்து நிலையத்தில் மேலும் 2 குடிநீா் தொட்டிகள்

திருவையாறு அருகே சிறுத்தை நடமாட்டம்? வனத் துறையினா் ஆய்வு

அரையாண்டு வரி செலுத்தினால் 5 சதம் ஊக்கத் தொகை: செயல் அலுவலா் தகவல்.

மாந்திரீகம் செய்வதாகக் கூறி மூதாட்டியிடம் 5 பவுன் சங்கிலி பறிப்பு

SCROLL FOR NEXT