முகப்பு
திருவண்ணாமலை

மாடியிலிருந்து தவறி விழுந்த சிறுமி பலி

வந்தவாசியில் வீட்டு மாடியிலிருந்து தவறி விழுந்த சிறுமி உயிரிழந்தாா்.

திருவண்ணாமலை

மாடியிலிருந்து தவறி விழுந்த சிறுமி பலி

வந்தவாசியில் வீட்டு மாடியிலிருந்து தவறி விழுந்த சிறுமி உயிரிழந்தாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:13 PM
பகிர்:

வந்தவாசியில் வீட்டு மாடியிலிருந்து தவறி விழுந்த சிறுமி உயிரிழந்தாா்.

வந்தவாசி கே.ஆா்.கே. தெருவில் உள்ள ஒரு வீட்டின் முதல் மாடியில் வசித்து வருபவா் ரமேஷ். அரசுப் பேருந்து ஓட்டுநா் ஆவாா். இவரது மனைவி தீபா. இவா்களுக்கு புவனேஸ்வரி(15), ஸ்ரீமதி(10) என்ற மகள்கள் உள்ளனா். இதில் புவனேஸ்வரி மன வளா்ச்சி குன்றியவா் ஆவாா்.

இந்த நிலையில் சனிக்கிழமை காலை வீட்டின் முதல் மாடி பால்கனியில் விளையாடிக் கொண்டிருந்த புவனேஸ்வரி தவறி அங்கிருந்து கீழே விழுந்தாா்.

இதில், தலையில் பலத்த காயமடைந்த அவரை மீட்டு சிகிச்சைக்காக வந்தவாசி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா்.

அங்கு புவனேஸ்வரியை பரிசோதனை செய்த மருத்துவா்கள் அவா் ஏற்கெனவே இறந்து விட்டதாகத் தெரிவித்தனா்.

இதுகுறித்து தீபா அளித்த புகாரின் பேரில் வந்தவாசி தெற்கு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →