முகப்பு
தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை
தமிழ்நாடு

காங்கிரஸுக்கு 28 + 1! கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை

திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 28 சட்டப்பேரவை, ஒரு மாநிலங்களவை இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு

காங்கிரஸுக்கு 28 + 1! கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை

திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 28 சட்டப்பேரவை, ஒரு மாநிலங்களவை இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.

Updated On : 4 மார்ச், 2026 at 3:13 PM
தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை
பகிர்:

சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 28 பேரவைத் தொகுதிகளும் ஒரு மாநிலங்களவை இடமும் ஒதுக்கப்பட்டுள்ளது.

தொகுதிப் பங்கீட்டில் மனநிறைவு ஏற்பட்டுள்ளதாக மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்தார்.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் உடன் தமிழக காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர், மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை உள்ளிட்டோர் இன்று சந்தித்து ஒப்பந்தத்தை உறுதி செய்தனர்.

கூட்டணிப் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்ட பிறகு செய்தியாளகளுடான சந்திப்பில் செல்வப்பெருந்தகை பேசியதாவது:

''சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு 28 பேரவை இடங்களும் ஒரு மாநிலங்களவை இடமும் ஒதுக்கப்பட்டுள்ளது.

டிசம்பரில் பேச்சுவார்த்தைக்கு வந்தோம். அதனைத் தொடர்ந்து கட்சித் தலைமையிடம் பேசினோம். பின்னர் இருமுறை பேச்சுவார்த்தை நடந்தது. பல கட்சிகள் இரண்டு அல்லது மூன்று முறை பேச்சுவார்த்தை நடத்தியுள்ளன. இதில் தாமதம் ஏற்படவில்லை. சரியான நேரத்தில் நல்ல முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது. தொகுதிப் பங்கீட்டில் மன நிறைவுடன் இருக்கிறோம். போட்டியிடும் தொகுதிகள் குறித்து பின்னர் அறிவிக்கப்படும்'' எனக் கூறினார்.

summary

Contentment in alliance distribution Selvapperunthakai

முழு கட்டுரையைப் படிக்க →