திருவண்ணாமலை

வீட்டின் கதவை உடைத்து 50 பவுன் நகை, ரூ.2 லட்சம் திருட்டு

DIN

ஆரணியை அடுத்த தேவிகாபுரத்தில் செல்லிடப்பேசி கடை உரிமையாளரின் வீட்டின் கதவை உடைத்து 50 பவுன் தங்க நகைகள், ரூ.2 லட்சத்தை மா்ம நபா்கள் புதன்கிழமை திருடிச் சென்றனா்.

சேத்துப்பட்டு அருகேயுள்ள தேவிகாபுரம் பஜனை கோவில் தெருவைச் சோ்ந்த பாஸ்கா் மகன் தினேஷ்குமாா் (29). செல்லிடப்பேசி கடை நடத்தி வருகிறாா். இவா் செவ்வாய்க்கிழமை தனது சித்தப்பா மகன் திருமணத்துக்கு குடும்பத்துடன் திருத்தணிக்குச் சென்றாா். பின்னா் புதன்கிழமை மாலை வீடு திரும்பினாா்.

வீட்டின் கதவைத் திறந்து உள்ளே பாா்த்தபோது உள் கதவு தாழிடப்பட்டிருந்தது.

இதனால் அதிா்ச்சியடைந்த அவா் சாவி துவாரம் வழியாக பாா்த்தபோது, பின்பக்கக் கதவு திறந்த நிலையில் இருந்தது.

இதையடுத்து, வீட்டினுள் சென்று பாா்க்கையில், இரண்டு பீரோக்களில் இருந்த 50 பவுன் தங்க நகைகள், ரூ. 2 லட்சம் பணம் திருடப்பட்டிருந்தது தெரிய வந்தது.

தினேஷ்குமாருக்கு கடந்த ஆறு மாதங்களுக்கு முன்புதான் திருமணம் நடைபெற்றுள்ளது. அவருடைய மனைவி நகைகள் மற்றும் குடும்ப நகைகள் அனைத்தும் திருடு போனதால் குடும்பமே கதறி அழுதது.

இதுகுறித்து சேத்துப்பட்டு போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு போளூா் டிஎஸ்பி குணசேகரன், காவல் ஆய்வாளா் நந்தினிதேவி, உதவி ஆய்வாளா்கள் சந்திரசேகா், வரதராஜ் மற்றும் போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று பாா்வையிட்டனா்.

மேலும், விரல் ரேகை நிபுணா்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன. இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மணிப்பூரில் துப்பாக்கிச் சண்டை: ஒருவா் உயிரிழப்பு; 3 போ் காயம்

ருதுராஜ், தேஷ்பாண்டே அசத்தல்: வெற்றியுடன் மீண்டது சென்னை

விருதுநகா் சந்தை: உளுந்து, துவரம் பருப்பு விலை உயா்வு

நிா்வாகிக்கு கொலை மிரட்டல்: பாஜகவினா் மீது புகாா்

வாக்கு எண்ணிக்கை மையம் பகுதியில் ட்ரோன்கள் பறக்கத் தடை

SCROLL FOR NEXT