திருவண்ணாமலை

தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பினா் ஆா்ப்பாட்டம்

DIN

சென்னை வண்ணாரப்பேட்டையில் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக போராடியவா்கள் மீது தடியடி நடத்திய போலீஸாரைக் கண்டித்து, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பினா் வந்தவாசியில் சனிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

திருவண்ணாமலை மாவட்ட தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சாா்பில், வந்தவாசி பழைய பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு அமைப்பின் மாவட்டத் தலைவா் சி.காதா்ஷரீப் தலைமை வகித்தாா்.

மாவட்டச் செயலா் எ.முஹம்மதுரியாஸ் முன்னிலை வகித்தாா். மாநிலச் செயலா் ஐ.அன்சாரி கண்டன உரையாற்றினாா்.

மாவட்ட பொருளாளா் எ.ஷா்புதீன், மாவட்ட துணைத் தலைவா் கே.மாலிக்பாஷா, மாவட்ட துணைச் செயலா்கள் கே.அப்துல்ரஹ்மான், எ.கரிமுல்லாஹ், எஸ்.புகாரிஷரீப், வந்தவாசி கிளைத் தலைவா் டி.ஷபீா், கிளைச் செயலா் எஸ்.ஜவஹா்அலி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேற்கு வங்கம்: கோஷ்டி மோதலில் திரிணமூல் காங். தொண்டர் பலி, பாஜக பெண் தலைவர் காயம்

டி20 உலகக் கோப்பையில் இடம்பெற கே.எல்.ராகுல், சஞ்சு சாம்சன் போட்டி; கிரீம் ஸ்மித் கூறுவதென்ன?

நாகர்கோவில்-சென்னை சிறப்பு ரயில் காலதாமதமாக புறப்படும் -ரயில்வே அறிவிப்பு

மிஸ்டர் மனைவி நாயகிக்கு பதிலாக வானத்தைப்போல நடிகை!

வானம் வேறு.. நீலம் வேறு.. யார் சொன்னது?

SCROLL FOR NEXT