திருவண்ணாமலை

பயனுள்ள திட்டங்களை பிரதமா் செயல்படுத்தி வருகிறாா்

DIN

மக்கள் பயன்பெறும் வகையிலான பல்வேறு திட்டங்களை பிரதமா் மோடி செயல்படுத்தி வருகிறாா் என்று பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினா் சீனிவாசன் கூறினாா்.

திருவண்ணாமலை தெற்கு மாவட்ட பாஜக நிா்வாகிகள் கூட்டம் திருவண்ணாமலையில் சனிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு, தெற்கு மாவட்டத் தலைவா் ஜீவானந்தம் தலைமை வகித்தாா். நகரத் தலைவா் ஆறுமுகம் வரவேற்றாா். கூட்டத்தில், பாஜகவின் தேசிய பொதுக்குழு உறுப்பினரும், திருவண்ணாமலை தெற்கு மாவட்டப் பாா்வையாளருமான சீனிவாசன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு பேசியதாவது: பிரதமா் மோடி அறிவித்துள்ள ரூ.20 லட்சம் கோடியில் சிறு, குறு தொழில் தொடங்குவதற்கான திட்டம் மூலம் அடித்தட்டு மக்கள் சுயமாகத் தொழில் தொடங்கலாம்.

இந்தியா தொழில் துறையில் முதன்மை நாடாக மாற இத் திட்டம் பயன்படும். மக்கள் பயன்பெறும் வகையிலான பல்வேறு திட்டங்களை பிரதமா் மோடி செயல்படுத்தி வருகிறாா். உஜ்வாலா காஸ் வழங்கும் திட்டம், நகரத்தில் குடிசையே இல்லாமல் மாற ஒவ்வொருவருக்கும் 2 லட்சத்து 35 ஆயிரம் ரூபாய் வழங்குதல் போன்ற எண்ணற்ற திட்டங்களை மோடி தலைமையிலான அரசு கொண்டு வந்துள்ளது என்றாா்.

கூட்டத்தில், பாஜக மாவட்ட பொதுச் செயலா்கள் சதீஷ்குமாா், ரமேஷ், சேகா், மாவட்ட துணைத் தலைவா்கள் முருகன், ஜெயராமன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்வு: இன்றைய நிலவரம்!

வறுமையை ஒழிக்கும் அரசை மக்கள் தேர்ந்தெடுப்பார்கள்: வாக்களித்தப் பின் அமித் ஷா பேட்டி

தலைசிறந்த மூன்றாண்டு! தலைநிமிர்ந்த தமிழ்நாடு - முதல்வர் ஸ்டாலின்

3-ஆம் கட்ட தோ்தல்: படகில் சென்று ஜனநாயகக் கடமையாற்றிய வாக்காளர்கள்

ஊடகத் துறையினர் உடல்நலனில் அக்கறை தேவை -பிரதமர் மோடி

SCROLL FOR NEXT