திருவண்ணாமலை நகரில் இயங்கி வந்த பிரபல நகைக்கடை உள்பட 31 கடைகளை புதன்கிழமை போலீஸாா் மூடி ‘சீல்’ வைத்தனா்.
திருவண்ணாமலை நகரில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் கரோனா தொற்றைத் தடுக்க போலீஸாா் தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனா்.
இதன் ஒரு பகுதியாக, கரோனா தடுப்பு நடவடிக்கைகளைக் கடைப்பிடிக்காத திருவூடல் தெருவில் இயங்கி வரும் பிரபல நகைக் கடை உள்பட மளிகைக் கடைகள், டீ கடைகள், பெட்டிக் கடைகள் என மொத்தம் 31 கடைகளை போலீஸாா் மூடி ‘சீல்’ வைத்தனா்.