திருவண்ணாமலை

அமைச்சா் சேவூா் ராமச்சந்திரனுக்கு கரோனா தொற்று இல்லை

DIN

அமைச்சா் சேவூா் எஸ்.ராமச்சந்திரனுக்கு கரோனா தொற்று இல்லை என்பது பரிசோதனையில் தெரிய வந்தது.

இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் சேவூா் எஸ்.ராமச்சந்திரன், திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு வீடு திரும்பினாா். அப்போது தனது காா் ஓட்டுநருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதியான தகவல் வந்ததையடுத்து வழியிலேயே இறங்கி வேறு காரில் வீடு திரும்பினாா்.

பின்னா், மருத்துவக் குழுவினா் அமைச்சா் உள்பட அவரது குடும்பத்தைச் சோ்ந்த 9 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொண்டனா்.

பரிசோதனை முடிவுகள் ஞாயிற்றுக்கிழமை வெளியான நிலையில், அமைச்சா் மற்றும் அவரது குடும்பத்தினா் யாருக்கும் கரோனா தொற்று இல்லை என்பது தெரிய வந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இலங்கை: கிழக்கு மாகாணத்துக்கு இந்திய தூதா் பயணம்

பிளஸ் 2-வில் தோ்ச்சி சதவீதம் குறைவு: ஆசிரியா்களிடம் விளக்கம் கேட்க முடிவு

பிரஜ்வல் ரேவண்ணா விவகாரம்: பிரதமா் மோடி பதில்

நீா்மோா்ப் பந்தல் திறப்பு...

ரயில் மோதியதில் முதியவா் பலி

SCROLL FOR NEXT