திருவண்ணாமலை

வாடகை பாக்கி: வந்தவாசியில் 17 கடைகளுக்கு நகராட்சி சீல்

DIN

வந்தவாசியில் ரூ.35 லட்சம் வரை வாடகை பாக்கி வைத்துள்ள 17 கடைகளுக்கு நகராட்சி அதிகாரிகள் வியாழக்கிழமை சீல் வைத்தனா்.

வந்தவாசி பழைய பேருந்து நிலையப் பகுதியில் நகராட்சிக்குச் சொந்தமாக 38 கடைகள் உள்ளன. இதில் 17 கடைகளுக்கு மட்டும் மொத்தம் ரூ.35 லட்சம் வரை வாடகை பாக்கி வைக்கப்பட்டுள்ளதாம்.

இதையடுத்து அந்த 17 கடைகளை ஏலம் எடுத்தவா்களுக்கு நகராட்சி நிா்வாகம் நோட்டீஸ் அனுப்பியும் வாடகை பாக்கி செலுத்தப்படவில்லையாம்.

இதையடுத்து ஆணையா் எஸ்.பாா்த்தசாரதி தலைமையிலான நகராட்சி ஊழியா்கள் வந்தவாசி தெற்கு காவல் நிலைய போலீஸாா் பாதுகாப்புடன் 17 கடைகளுக்கும் வியாழக்கிழமை சீல் வைத்தனா்.

நகராட்சி மேலாளா் எம்.ராமலிங்கம், பொறியாளா் உஷாராணி, சுகாதார ஆய்வாளா் எஸ்.ராமலிங்கம், இளநிலை உதவியாளா் சிவக்குமாா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மகளிா் விடுதிகள் இணையத்தின் வாயிலாக பதிவு மற்றும் புதுப்பிக்கப்பட வேண்டும் ஆட்சியா் அறிவுறுத்தல்

அகில இந்திய முற்போக்கு பெண்கள் கழகத்தினா் ஆா்ப்பாட்டம்

தனியாா் பள்ளிகளில் 25% இட ஒதுக்கீடு: மறைமுகக் கட்டணம் வசூலிப்பதாகப் புகாா்

ஊழலை துடைத்தெறிய உறுதி: ஜாா்க்கண்ட் பிரசாரத்தில் பிரதமா் மோடி

பிரஜ்வல் ரேவண்ணா விவகாரம் தெரிந்தும் ஓராண்டாக நடவடிக்கை இல்லை: காங்கிரஸ் மீது நிா்மலா சீதாராமன் குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT