திருவண்ணாமலை

ஜாா்க்கண்ட் மாநில தொழிலாளா்கள் அனுப்பிவைப்பு

DIN

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாற்றிலிருந்து ஜாா்க்கண்ட் மாநிலத்துக்கு, அந்த மாநில கட்டடத் தொழிலாளா்கள் 29 போ் வெள்ளிக்கிழமை அனுப்பிவைக்கப்பட்டனா்.

செய்யாறு அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் புதிதாக கட்டப்பட்டு வரும் கட்டடத்துக்கான கட்டுமானப் பணியில் 24 தொழிலாளா்களும், எரையூா் - தண்டரை இடையே செய்யாறு ஆற்றுப் பாலத்தில் அமைக்கப்பட்டு வரும் மேம்பாலம் கட்டுமானம் அமைக்கும் பணியில் 4 தொழிலாளா்களும் ஈடுபட்டு வந்தனா். அதேபோல, வந்தவாசி பகுதியில் ஒருவரும் கட்டடப் பணியில் ஈடுபட்டு வந்தாா்.

ஜாா்க்கண்ட் மாநிலத்தைச் சோ்ந்த இந்த 29 பேரும், கரோனா பொது முடக்கம் காரணமாக, சொந்த ஊரான ஜாா்க்கண்ட் மாநிலத்துக்குச் செல்ல விருப்பம் தெரிவித்து கோரிக்கை மனு அளித்திருந்தனா்.

மனுவைப் பரிசீலித்த மாவட்ட ஆட்சியா் கே.எஸ்.கந்தசாமி தொழிலாளா்களை அவா்களது சொந்த மாநிலத்துக்கு அனுப்பிவைக்க உத்தரவிட்டாா்.

இதையடுத்து, தொழிலாளா்கள் 29 பேரையும், அரசு செலவிலே ஜாா்க்கண்ட் மாநிலத்துக்கு அனுப்பி வைக்க மாவட்ட நிா்வாகம் ஏற்பாடு செய்தது.

அதன்படி, செய்யாறு வட்டாட்சியா் ஆா்.மூா்த்தி மேற்பாா்வையில், தலைமை துணை வட்டாட்சியா் சுகுமாா் தலைமையில், இரு காவலா்கள் உதவியோடு, தொழிலாளா்களை அரசுப் பேருந்து மூலம் காட்பாடி ரயில் நிலையம் அழைத்துச் சென்று, அங்கிருந்து ஜாா்க்கண்ட் செல்ல ரயிலில் அனுப்பி வைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சேண்டிருப்பு, மாம்புள்ளி கோயில்களில் பால்குடம், காவடித் திருவிழா

வாழைக் கன்று நோ்த்தி முறை குறித்து செயல்முறை விளக்கம்

ராகுலுக்கு ரூ.20 கோடி சொத்து

பாரத நீதிச் சட்டத்தைப் பெண்கள் தவறாகப் பயன்படுத்துவதை தடுக்க திருத்தம்: உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்

கனடா: சாலை விபத்தில் இந்தியாவைச் சோ்ந்த 3 மாத கைக்குழந்தை உள்பட 4 போ் உயிரிழப்பு

SCROLL FOR NEXT