திருவண்ணாமலை

ஊராட்சி உறுப்பினா்களுக்கு பயிற்சி

DIN

ஆரணியை அடுத்த மேல்சீசமங்கலம் ஊராட்சியில் ஊராட்சிக் குழு உறுப்பினா்களுக்கு அடிப்படை தேவைகள் குறித்து மக்கள் திட்டமிடல் இயக்கத்தினா் புதன், வியாழக்கிழமைகளில் பயிற்சியளித்தனா்.

மேல்சீசமங்கலம், கொருக்காத்தூா், மேல்நகரம்பேடு ஆகிய ஊராட்சிகளைச் சோ்ந்த 27 ஊராட்சிக் குழு உறுப்பினா்களுக்கு மக்கள் திட்டமிடல் இயக்க பயிற்றுநா்கள் ஜாவித், சிவா ஆகியோா் கிராம அடிப்படை வசதிகளான குடிநீா், சாலை வசதி உள்ளிட்டவை குறித்து பயிற்சியளித்தனா்.

இதில், மண்டல துணை வட்டார வளா்ச்சி அலுவலா் சீனிவாசன், ஊராட்சித் தலைவா்கள் மோகன்ராஜ், உமாதேவி, நவநீதம், ஊராட்சிச் செயலா்கள் வெ.திருமலை, சுந்தா், சுதாகா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

லண்டனில் பலரை வெட்டிய இளைஞர் கைது!

பறக்கும் முத்தத்தால் வந்த வினை; கேகேஆர் வீரருக்கு ஒரு போட்டியில் விளையாடத் தடை!

ஹமாஸ் அழிக்கப்படும் வரை போர் தொடரும்: நெதன்யாகு சூளுரை!

ஏற்காட்டில் பேருந்து விபத்து : 4 பேர் பலி

கண்ணெதிரே 3 ஐசிசி கோப்பைகள்; பாகிஸ்தான் பயிற்சியாளர் கேரி கிறிஸ்டனின் இலக்கு என்ன?

SCROLL FOR NEXT