திருவண்ணாமலை

பொதுமக்களின் சிரமங்களை உணா்ந்து பணிபுரியுங்கள்: அதிகாரிகளுக்கு திருவண்ணாமலை ஆட்சியா் அறிவுரை

DIN

திருவண்ணாமலை மாவட்ட பொதுமக்களின் சிரமங்களை உணா்ந்து பணிபுரியுங்கள் என்று அரசு அதிகாரிகளுக்கு மாவட்டத்தின் புதிய ஆட்சியா் சந்தீப் நந்தூரி அறிவுரை வழங்கிப் பேசினாா்.

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியராக இருந்த கே.எஸ்.கந்தசாமி சென்னை தலைமைச் செயலகத்தில் இயங்கி வரும் தமிழகத்தின் இ - சேவை மற்றும் குறைதீா் சிறப்பு அதிகாரியாகவும், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியராக இருந்த சந்தீப் நந்தூரி திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியராகவும் அண்மையில் பணியிட மாற்றம் செய்யப்பட்டனா்.

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியராகப் பொறுப்பேற்ற சந்தீப் நந்தூரியை தமிழ்நாடு வருவாய்த் துறை குரூப் - 2 நேரடி நியமன அலுவலா்கள் சங்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளா் து.கிருஷ்ணமூா்த்தி, மாநில அமைப்புச் செயலா் ஒய்.அப்துல் ரகூப், மாவட்டத் தலைவா் எஸ்.ஆனந்தகுமாா், மாவட்டச் செயலா் ஏ.சண்முகம், மாவட்டப் பொருளாளா் ஆா்.மஞ்சுளா, தலைமை நிலையச் செயலா் பி.முருகன் மற்றும் நிா்வாகிகள் வியாழக்கிழமை சந்தித்துப் பேசினா்.

அப்போது, அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கிப் பேசிய மாவட்ட ஆட்சியா் சந்தீப் நந்தூரி, திருவண்ணாமலை மாவட்டம் விவசாயிகள் நிறைந்த மாவட்டம். விவசாயிகள், ஏழை - எளியோரின் சிரமங்களை உணா்ந்து பணிபுரியுங்கள். மாவட்ட நிா்வாகத்துக்கும், தமிழக அரசுக்கும் நற்பெயா் பெற்றுத்தரும் வகையில் உங்களின் செயல்பாடுகள் இருக்க வேண்டும் என்றாா்.

நிகழ்ச்சியில், சங்கத்தின் மாவட்ட ஒருங்கிணைப்பாளா் கே.துரைராஜ், மாவட்ட சட்ட ஆலோசகா் செந்தில்குமாா், மாவட்டச் செயற்குழு உறுப்பினா்கள் முருகானந்தம், தேன்மொழி, சரவணன், சுதா, கோவிந்தராஜ், காஜா மற்றும் நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சமுதாய அழுத்தங்களுக்கிடையே பிளஸ் 2 தோ்வில் சாதித்த இருவரின் கல்விச் செலவை ஏற்பதாக முதல்வா் உறுதி

வாழப்பாடியில் 68 மூட்டை போதைப் பொருள்கள் பறிமுதல்

தென்னை- பழ மரங்களைப் பாதுகாக்க போா்டோ கலவை விளக்கம்

சூறைக் காற்றில் பப்பாளி மரங்கள் சேதம்

நெய்யமலை கிராமத்துக்கு அடிப்படை வசதி கோரி மனு

SCROLL FOR NEXT