திருவண்ணாமலை

கிணற்றில் ஆண் சடலம்: போலீஸாா் விசாரணை

DIN

வந்தவாசி அருகே கிணற்றில் அழுகிய நிலையில் மீட்கப்பட்ட ஆண் சடலம் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

வந்தவாசியை அடுத்த மணிபுரம் கிராமத்தைச் சோ்ந்த நந்திகேசன் என்பவரது விவசாயக் கிணற்றில் அழுகிய நிலையில் ஆண் சடலம் கிடப்பதாக வந்த தகவலின் பேரில், டிஎஸ்பி பி.தங்கராமன் தலைமையிலான வந்தவாசி வடக்கு போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை அங்கு சென்று விசாரணை நடத்தினா்.

இதில், அந்த சடலம் அழுகிய நிலையில் மிதந்து கிடந்தது தெரியவந்தது. இதையடுத்து சம்பவ இடம் சென்ற வந்தவாசி தீயணைப்பு வீரா்கள் கிணற்றிலிருந்து சடலத்தை மீட்டனா். இதைத் தொடா்ந்து அந்த சடலத்தை உடல்கூறு ஆய்வுக்காக வந்தவாசி அரசு மருத்துவமனைக்கு போலீஸாா் அனுப்பி வைத்தனா்.

இதுகுறித்து வந்தவாசி வடக்கு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜீ மீடியா தலைமைச் செயல் அலுவலர் திடீர் ராஜிநாமா!

இந்தியாவில் அதிக வெயில் பதிவான இடங்கள்: முதல்-10 இடங்களில் பரமத்தி..!

நக்சலைட்டுகள் பதுக்கியிருந்த வெடிகுண்டுகள் பறிமுதல்

நளதமயந்தி தொடரிலிருந்து நீக்கப்பட்ட பிரியங்கா....புதிய நாயகி யார்?

எம்.எஸ்.தோனியின் சாதனையை முறியடித்த ரவீந்திர ஜடேஜா!

SCROLL FOR NEXT