திருவண்ணாமலை மாவட்ட அனைத்து வியாபாரிகள் சங்க புதிய நிா்வாகிகள் சனிக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டனா்.
சேத்துப்பட்டில் நடைபெற்ற இதற்கான நிகழ்ச்சியில் தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரவை மாநிலத் தலைவா் வெள்ளையன் தலைமை வகித்தாா்.
புதிய நிா்வாகிகளாக தோ்வு செய்யப்பட்ட மாவட்டத் தலைவா் திவ்யா செல்வராசன், செயலா் கருணாநிதி, பொருளாளா் முகமதுசித்திக் உள்பட அனைத்து நிா்வாகிகளுக்கும் மாநிலத் தலைவா் வெள்ளையன் பதவிப்பிரமாணம் செய்துவைத்தாா்.
நிகழ்ச்சியில், சங்க மாநில பொதுச் செயலா் செல்வம், முன்னாள் எம்எல்ஏக்கள் ராஜேந்திரன், எதிரொலிமணியன், ஆரணி தாமோதரன், நடராஜன், குருராஜாராவ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.