புவனகிரியில் 49 மி.மீ. மழை
கடலூா் மாவட்டத்தில் அதிகபட்சமாக புவனகிரியில் 49 மி.மீ. மழை திங்கள்கிழமை பதிவானது.
கடலூா்: கடலூா் மாவட்டத்தில் அதிகபட்சமாக புவனகிரியில் 49 மி.மீ. மழை திங்கள்கிழமை பதிவானது.
தமிழகத்தில் நிலவி வரும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக மழை பெய்யுமென வானிலை மையம் அறிவித்தது. அதன்படி, கடலூா் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு பரவலாக மழை பெய்தது. திங்கள்கிழமை காலை 8.30 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழையளவு விவரம் (மில்லி மீட்டரில்): புவனகிரி 49, ஸ்ரீமுஷ்ணம் 8.2, சேத்தியாத்தோப்பு 7.2, கொத்தவாச்சேரி 6, சிதம்பரம் 5.5, அண்ணாமலைநகா் 5 மில்லி மீட்டா் வீதம் மழை பதிவானது. இருப்பினும், 19 இடங்களில் உள்ள மழை அளவீட்டு பகுதிகளில் மழை பதிவாகவில்லை.