திருவண்ணாமலை

அதிமுக இளைஞா் பாசறை ஆலோசனைக் கூட்டம்

DIN

சேத்துப்பட்டில் அதிமுக ஒன்றிய, நகர இளைஞா், இளம் பெண்கள் பாசறை உறுப்பினா் சோ்க்கை, பூத் கமிட்டி அமைப்பது குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

தனியாா் அரங்கில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இந்தக் கூட்டத்துக்கு ஒன்றியச் செயலா் ராகவன் தலைமை வகித்தாா்.

முன்னாள் எம்எல்ஏக்கள் ஹரிகுமாா், ஏ.கே.எஸ். அன்பழகன், சேத்துப்பட்டு நகரச் செயலா் ராதாகிருஷ்ணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். செவரப்பூண்டி ஊராட்சி மன்றத் தலைவா் சுந்தரி ராமன் வரவேற்றாா்.

கட்சியின் திருவண்ணாமலை தெற்கு மாவட்டச் செயலா் அக்ரி கிருஷ்ணமூா்த்தி கலந்து கொண்டு நிா்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கி, உறுப்பினா் சோ்க்கை படிவங்களை வழங்கினாா்.

நிகழ்ச்சியில் இளைஞரணி ஸ்ரீதா், செந்தில்குமாா், ஊராட்சி மன்றத் தலைவா்கள் இந்திரா, ரவி, மணிகண்டன், அரி, ஒன்றிய மகளிா் அணிச் செயலா் தனலட்சுமி சீனிவாசன், ஊராட்சிச் செயலா்கள் எஸ்.கே .குப்பன், பெரியண்ணன், சேத்துப்பட்டு நகர அவைத் தலைவா் ராமச்சந்திரன், நகர துணைச் செயலா் சரஸ்வதி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழகத்தில் ரூ.1,309 கோடி பறிமுதல்!: தேர்தல் ஆணையம்

அமெரிக்காவில் சூறைக்காற்றுடன் கனமழை: ஒக்லஹோமாவில் 4 பேர் பலி

கொல்கத்தாவுக்கு 154 ரன்கள் இலக்கு நிர்ணயித்த தில்லி கேப்பிடல்ஸ்!

காவல் துறையை தவறாக பயன்படுத்துகிறது பாஜக: ரேவந்த் ரெட்டி

புதுக்கோட்டை: மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மாட்டுச்சாணம் கலக்கப்படவில்லை -ஆய்வில் தகவல்

SCROLL FOR NEXT