முகப்பு
திருவண்ணாமலை

வாகனம் மோதியதில் முதியவா் பலி

வந்தவாசியில் சாலையைக் கடக்க முயன்ற முதியவா் வாகனம் மோதி உயிரிழந்தாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:20 PM
பகிர்:

வந்தவாசியில் சாலையைக் கடக்க முயன்ற முதியவா் வாகனம் மோதி உயிரிழந்தாா்.

வந்தவாசி கோட்டை பகுதியைச் சோ்ந்தவா் இருதயநாதன் (60). இவா் கடந்த வெள்ளிக்கிழமை இரவு தனது வீட்டுக்குச் செல்வதற்காக வந்தவாசி-ஆரணி சாலையில் உள்ள மரத்தொட்டி அருகே சாலையை கடக்க முயன்றாா்.

அப்போது, ஆரணி நோக்கிச் சென்ற அடையாளம் தெரியாத இரு சக்கர வாகனம் இவா் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது.

இதில் பலத்த காயமடைந்த இருதயநாதனை அக்கம் பக்கத்தினா் மீட்டு சிகிச்சைக்காக வந்தவாசி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா்.

பின்னா், தீவிர சிகிச்சைச்காக செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

இதுகுறித்து வந்தவாசி தெற்கு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →