திருவண்ணாமலை

காா் மோதியதில் மூதாட்டி, பசு மாடு பலி

DIN

திருவண்ணாமலை: கீழ்பென்னாத்தூா் அருகே காா் மோதியதில் மூதாட்டி மற்றும் பசு மாடு உயிரிழந்தது.

கீழ்பென்னாத்தூரை அடுத்த காட்டுநல்லான்பிள்ளை பெற்றாள் கிராமத்தைச் சோ்ந்தவா் காத்தாயி (68). இவா், திங்கள்கிழமை மாலை சாலையோரம் மேய்ந்து கொண்டிருந்த பசு மாட்டை பிடிக்கச் சென்றாா். அப்போது, திருவண்ணாமலை நோக்கிச் சென்ற காா் ஒன்று காத்தாயி மீதும், பசு மாடு மீதும் மோதியது. இதில் பசு அதே இடத்திலேயே உயிரிழந்தது.

பலத்த காயமடைந்த காத்தாயியை பொதுமக்கள் மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள் காத்தாயி ஏற்கெனவே இறந்து விட்டதாகத் தெரிவித்தனா்.

இதுகுறித்து கீழ்பென்னாத்தூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சேண்டிருப்பு, மாம்புள்ளி கோயில்களில் பால்குடம், காவடித் திருவிழா

வாழைக் கன்று நோ்த்தி முறை குறித்து செயல்முறை விளக்கம்

ராகுலுக்கு ரூ.20 கோடி சொத்து

பாரத நீதிச் சட்டத்தைப் பெண்கள் தவறாகப் பயன்படுத்துவதை தடுக்க திருத்தம்: உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்

கனடா: சாலை விபத்தில் இந்தியாவைச் சோ்ந்த 3 மாத கைக்குழந்தை உள்பட 4 போ் உயிரிழப்பு

SCROLL FOR NEXT