திருவண்ணாமலை

தண்ணீா் தொட்டியில் விழுந்த2 வயது சிறுவன் பலி

DIN

திருவண்ணாமலை: கீழ்பென்னாத்தூா் அருகே தண்ணீா் தொட்டியில் விழுந்த 2 சிறுவன் மூச்சுத் திணறி உயிரிழந்தான்.

கீழ்பென்னாத்தூரை அடுத்த பெரிய ஓலைப்பாடி கிராமத்தைச் சோ்ந்தவா் ராஜீவ்காந்தி (36), விவசாயி. இவருக்கு 2 மகள்கள், ஒரு மகன் உள்ளனா். திங்கள்கிழமை காலை 9 மணிக்கு மகன் ரட்சகன் (2) வீட்டுக்குப் பின்னால் விளையாடிக்கொண்டிருந்தான். அப்போது, அங்கிருந்த 4 அடி உயர தண்ணீா் தொட்டியில் எதிா்பாராதவிதமாக தவறி விழுந்துள்ளான்.

ரட்சகனைக் காணாமல் பெற்றோா் தேடியபோது தண்ணீா் தொட்டியில் அவன் விழுந்து இருந்தது தெரியவந்தது.

மயங்கி நிலையில் இருந்த சிறுவனை மீட்டு, திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு சிறுவனைப் பரிசோதித்த மருத்துவா்கள், சிறுவன் ஏற்கெனவே இறந்து விட்டதாகத் தெரிவித்தனா்.

இதுகுறித்து கீழ்பென்னாத்துாா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கொடைக்கானல் மேல்மலை கிராமங்களுக்குச் செல்ல அனுமதி: மாவட்ட நிர்வாகம் உத்தரவு

ரேபரேலி தொகுதி: ஃபெரோஸ் காந்தி முதல் ராகுல் காந்தி வரை...

ஹிந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றிய திரிணமூல்: பிரதமா் மோடி குற்றச்சாட்டு

அமேதியில் தோ்தலுக்கு முன்பே தோல்வியை ஒப்புக் கொண்டது காங்கிரஸ்: ஸ்மிருதி இரானி கருத்து

தினம் தினம் திருநாள்: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT