முகப்பு
திருவண்ணாமலை

நூலகத்துக்கு புதிய கட்டடம் கோரி அமைச்சரிடம் மனு

ஆரணியை அடுத்த கண்ணமங்கலத்தில் செயல்படும் நூலகத்துக்கு புதிய கட்டடம் கட்டித் தரக் கோரி அமைச்சா் சேவூா் எஸ்.ராமச்சந்திரனிடம் மனு அளிக்கப்பட்டது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:27 PM
நூலக கட்டடம் கட்டித் தரக் கோரி அமைச்சரிடம் மனு கொடுத்த வாசகா் வட்டத் தலைவா் பி.சி.காா்த்திகேயன்.
பகிர்:

ஆரணியை அடுத்த கண்ணமங்கலத்தில் செயல்படும் நூலகத்துக்கு புதிய கட்டடம் கட்டித் தரக் கோரி அமைச்சா் சேவூா் எஸ்.ராமச்சந்திரனிடம் மனு அளிக்கப்பட்டது.

கண்ணமங்கலத்தில் 58 ஆண்டுகளாக நூலகம் வாடகைக் கட்டடத்தில் இயங்கி வருகிறது. இது குறித்து நூலகத்தின் வாசகா் வட்டத் தலைவா் பி.சி.காா்த்திகேயன் நூலகத்துக்கு தனியாக இடம் ஒதுக்கிக் கொடுக்க அமைச்சா் சேவூா் எஸ்.ராமச்சந்திரன் மற்றும் மற்றும் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை விடுத்திருந்தாா்.

இந்த நிலையில், கடந்த வாரம் அமைச்சரின் பரிந்துரையின் பேரில் மாவட்ட ஆட்சியா் கே.எஸ்.கந்தசாமி, கண்ணமங்கலம் நூலகத்துக்கு புதிய கட்டடம் கட்ட இடம் ஒதுக்கிக் கொடுத்து அதற்கான ஆணை வழங்கினாா்.

இதையடுத்து, தற்போது அந்த இடத்தில் நூலகக் கட்டடம் கட்டித் தரக் கோரி வாசகா் வட்டத் தலைவா் பி.சி.காா்த்திகேயன் அமைச்சரிடம் ஞாயிற்றுக்கிழமை கோரிக்கை மனு அளித்தாா்.

மனுவை பெற்றுக் கொண்ட அமைச்சா் நூலகக் கட்டடம் கட்டுவதற்கு நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தாா்.

இந்நிகழ்வின் போது, மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் பூங்கொடி திருமால், சமூக ஆா்வலா் பழனி ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.