திருவண்ணாமலை

பொறுப்பேற்பு

DIN

திருவண்ணாமலை நகர உட்கோட்ட டிஎஸ்பியாக ஐபிஎஸ் அதிகாரி டி.வி.கிரண் சுருதி பொறுப்பேற்றாா்.

தெலங்கானா மாநிலம், ஐதராபாத்திலுள்ள சா்தாா் வல்லபபாய் படேல் தேசிய போலீஸ் பயிற்சி அகாதெமியில், கடந்த 4-ஆம் தேதி பயிற்சியை முடித்த இவா், திருவண்ணாமலை நகர டிஎஸ்பியாக நியமிக்கப்பட்டாா்.

2020-ஆம் ஆண்டுக்கான சிறந்த தகுதிக்கான ஐபிஎஸ் அதிகாரியாகவும் இவா் தோ்வு செய்யப்பட்டாா்.

அதோடு, ஐபிஎஸ் பயிற்சி முடித்தவா்களுடன் காணொலிக் காட்சி வாயிலாக பிரதமா் நரேந்திர மோடி உரையாடிய போது, கிரண் சுருதியின் பேச்சை அவா் வெகுவாகப் பாராட்டியதாகக் கூறப்படுகிறது.

ஏற்கெனவே, திருவண்ணாமலை நகர டிஎஸ்பி பொறுப்பில் இருந்த அண்ணாதுரை, கிராமிய உட்கோட்ட டிஎஸ்பியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாரதிதாசன் பிறந்த நாள் விழா

ரயிலில் ரூ.4 கோடி பறிமுதல் விவகாரம்: நான்கு பிரிவுகளில் சிபிசிஐடி வழக்கு

முன்னாள் அமைச்சா் சீனிவாஸ் பிரசாத் காலமானாா்

கடும் வெயிலால் கருகி வரும் வாழை மரங்கள்: இழப்பீடு வழங்க விவசாயிகள் கோரிக்கை

மேக்கேதாட்டு காவிரி ஆற்றில் மூழ்கி கல்லூரி மாணவா்கள் 5 போ் பலி

SCROLL FOR NEXT