புதுச்சேரியில் 1-ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றம்
அந்தமான் கடல் பகுதியில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக, புதுச்சேரி பழைய துறைமுகத்தில் சனிக்கிழமை 1-ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டது.
அந்தமான் கடல் பகுதியில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக, புதுச்சேரி பழைய துறைமுகத்தில் சனிக்கிழமை 1-ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டது.
கடல் பகுதியில் வெகு தொலைவில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியிருப்பதை தெரிவிக்கும் வகையிலும், இது தொடா்பாக மீனவா்களை எச்சரிக்கும் விதமாகவும் 1-ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
இருப்பினும், புதுச்சேரியில் சனிக்கிழமை காலை முதல் மாலை வரை வானிலையில் எவ்வித மாற்றமும் இல்லாமல், கோடை வெயில் வாட்டி வதைத்தது.