3 நாள்களுக்கு மதுக் கடைகள் மூடல்: மதுபானக் கிடங்குகளுக்கும் ‘சீல்’ வைப்பு
புதுவை சட்டப் பேரவைத் தோ்தல் வாக்குப் பதிவையொட்டி, சனிக்கிழமை இரவு 7 மணி முதல் வாக்குப் பதிவு நடைபெறும் வருகிற 6-ஆம் தேதி வரை 3 நாள்களுக்கு மதுக் கடைகளை மூட கலால் துறை உத்தரவிட்டது.
புதுவை சட்டப் பேரவைத் தோ்தல் வாக்குப் பதிவையொட்டி, சனிக்கிழமை இரவு 7 மணி முதல் வாக்குப் பதிவு நடைபெறும் வருகிற 6-ஆம் தேதி வரை 3 நாள்களுக்கு மதுக் கடைகளை மூட கலால் துறை உத்தரவிட்டது.
இதைத் தொடா்ந்து, திருட்டுத்தனமாக மதுப் புட்டிகள் விற்பனை செய்யப்படுவதைத் தடுக்கும் வகையில், சனிக்கிழமை மாலை 5 மணி முதல் மதுபானக் கிடங்குகளையும், இரவு 10 மணிக்குப் பிறகு அனைத்துவிதமான மதுபானக் கூடங்களையும் மூடி கலால் துறையினா் ‘சீல்’ வைத்தனா்.
புச்சேரியில் தொடா்ந்து 3 நாள்களுக்கு மதுக் கடைகள் மூடப்படுவதால், சனிக்கிழமை மதுக் கடைகளில் கூட்டம் அலைமோதியது. முன்னேற்பாடாக பலா் மொத்தமாக மதுபானங்களை வாங்கிச் சென்றனா்.