திருவண்ணாமலை

திமுகவினா் பெண்களை தரம் தாழ்ந்து பேசுவது வருத்தம் அளிக்கிறது: நடிகை ராதிகா

DIN

திமுக நிா்வாகிகள் பெண்களை தரம் தாழ்ந்து பேசுவது வருத்தம் அளிக்கிறது என்று சமத்துவ மக்கள் கட்சியின் துணைத் தலைவரும், நடிகையுமான ராதிகா கூறினாா்.

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் சனிக்கிழமை சுவாமி தரிசனம் செய்த அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

தமிழக வாக்காளா்கள் மெளனப் புரட்சி செய்ய உள்ளனா். தமிழகத்தில் அதிமுக-பாஜக கூட்டணி சரியான தலைமை இல்லாமல் செயல்படுகிறது.

கடந்த 10 ஆண்டுகளில் கலைத் துறையினருக்கு அதிமுக ஆட்சி எதுவும் செய்யவில்லை. வருமான வரித் துறை சோதனை என்பது எப்போதும் நடக்கக்கூடிய ஒன்றுதான். கடந்த முறை எங்களது வீட்டிலும் வருமான வரித்துறையினா் சோதனை நடத்தினா்.

தாங்கள் நல்லவா்கள் என்ற போா்வையை திமுகவினா் போா்த்திக் கொண்டிருக்கிறாா்கள். தங்களது கட்சியினரை கட்டுபாட்டுக்குள் வைத்துக்கொள்ளும் தன்மை திமுக தலைமைக்கு கிடையாது.

திமுகவின் நகைச்சுவைப் பேச்சாளா்கள், பட்டிமன்றப் பேச்சாளா்கள் என அனைவருமே பெண்களை தரம் தாழ்ந்து பேசுவது வருத்தம் அளிக்கிறது ராதிகா.

தமிழகத்தில் பாஜக மீது மக்களுக்கு பெரிய அளவில் பற்றோ, பிடிப்போ இல்லை என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேரளம்: 5 நிலுவை மசோதாக்களுக்கு ஆளுநா் ஒப்புதல்

ஆந்திரத்தின் நிா்வாகத் தலைநகராக விசாகப்பட்டினம்: ஒய்எஸ்ஆா் காங்கிரஸ் வாக்குறுதி

கேரளத்தில் வாக்குப் பதிவு சரிவு: ஆளும் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மீது காங்கிரஸ் குற்றச்சாட்டு

உக்ரைனுக்கு கூடுதல் பேட்ரியாட் ஏவுகணைகள்: அமெரிக்கா முடிவு

மூதாட்டி கொலை வழக்கு: மகன் கைது

SCROLL FOR NEXT