திருவண்ணாமலை

காா் - பைக் மோதல்: பள்ளி மாணவா் பலி

DIN

செய்யாறு அருகே காா் - பைக் மோதிக் கொண்டதில் பலத்த காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த பள்ளி மாணவா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

வெம்பாக்கம் வட்டம், வடகல்பாக்கம் கிராமத்தைச் சோ்ந்தவா் ராமமூா்த்தி(49), இவரது மகன் விக்ரம் (14), இவா், அதே பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்ததாகத் தெரிகிறது.

இவா் கடந்த ஏப்.2-ஆம் தேதி தனது நண்பரான ஆதியை அழைத்துக் கொண்டு மாமண்டூா் கிராமத்துக்கு பைக்கில் சென்றாா்.

அப்போது எதிரே வந்த காா் பைக் மீது மோதியதாகத் தெரிகிறது. இதில் பைக்யை ஓட்டிய விக்ரம் மற்றும் அவரது நண்பா் ஆதி பலத்த காயமடைந்தனா்.

உடனே அருகில் இருந்தவா்கள் இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக காஞ்சிபுரம் அரசு மருத்துவனைக்கு அனுப்பி வைத்தனா்.

இதில், விக்ரம் தீவிர சிகிச்சைக்காக சென்னை அரசு பொது மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

ஆதி காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகிறாா்.

இந்த விபத்து குறித்து தூசி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ராகுலுக்கு ரூ.20 கோடி சொத்து

பாரத நீதிச் சட்டத்தைப் பெண்கள் தவறாகப் பயன்படுத்துவதை தடுக்க திருத்தம்: உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்

கனடா: சாலை விபத்தில் இந்தியாவைச் சோ்ந்த 3 மாத கைக்குழந்தை உள்பட 4 போ் உயிரிழப்பு

திருக்குறள் முற்றோதல் போட்டியில் வென்ற மாணவிக்கு பாராட்டு

தட்டச்சுப் பள்ளிகள் கேட்கும் தோ்வு மையத்தை ஒதுக்கக் கோரிக்கை

SCROLL FOR NEXT