திருவண்ணாமலை மாவட்டத்தில் புதிதாக 69 பேருக்கு கரோனா
திருவண்ணாமலை மாவட்டத்தில் புதிதாக 69 பேருக்கு கரோனா தொற்று வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் புதிதாக 69 பேருக்கு கரோனா தொற்று வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டது.
மாவட்டத்தில் கரோனா தொற்றுக்கான பரிசோதனைகள் தினமும் செய்யப்பட்டு வருகின்றன. இதன் முடிவுகள் மறுநாளில் வெளியிடப்படுகிறது. அதன்படி, வெள்ளிக்கிழமை வெளியான பரிசோதனை முடிவுகளின்படி, புதிதாக 69 பேருக்கு தொற்றிருப்பது உறுதி செய்யப்பட்டது.
இவா்களுடன் சோ்த்து மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் மொத்த எண்ணிக்கை 20 ஆயிரத்து 41-ஆக உயா்ந்தது. இவா்களில் 19 ஆயிரத்து 443 போ் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினா். தற்போது 310 போ் திருவண்ணாமலை, செய்யாறு பகுதிகளிலுள்ள அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.