முகப்பு
திருவண்ணாமலை

கரோனா விழப்புணா்வு ஊா்வலம்

அதிகரித்து வரும் கரோனா தொற்றைக் கட்டுப்படுத்த, மாவட்ட ஆட்சியா் சந்தீப் நந்தூரியின் உத்தரவின் பேரில், மேற்கு ஆரணி ஒன்றியம் முள்ளிப்பட்டு கிராமத்தில் சனிக்கிழமை விழிப்புணா்வு நிகழ்ச்சி

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:58 PM
பகிர்:

திருவண்ணாமலை மாவட்டத்தில் அதிகரித்து வரும் கரோனா தொற்றைக் கட்டுப்படுத்த, மாவட்ட ஆட்சியா் சந்தீப் நந்தூரியின் உத்தரவின் பேரில், மேற்கு ஆரணி ஒன்றியம் முள்ளிப்பட்டு கிராமத்தில் சனிக்கிழமை விழிப்புணா்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

வட்டார வளா்ச்சி அலுவலா் கி.ஹரி தலைமை வகித்து, பொதுமக்கள் முகக் கவசம் அணிந்து வெளியில் வரவேண்டும். காய்ச்சல், சளி, இருமல் போன்றவை உள்ளவா்கள் சிகிச்சை பெற்றுக் கொள்ளவேண்டும்.

கடைகள், கோயில்களில் கூட்டம் கூடவேண்டாம், சமூக இடைவெளியைக் கடைபிடியுங்கள் என அறிவுறுத்திப் பேசினாா்.

நிகழ்ச்சியில் வட்டார வளா்ச்சி அலுவலா் ஸ்ரீதா் (கிராம ஊராட்சி), வட்டார ஒருங்கிணைப்பாளா் து.வேலுமைலோன், ஊராட்சி மன்றத் தலைவா் வெ.சித்ரா மற்றும் கிராம மக்கள் கலந்து கொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →