முகக் கவசம் அணியாதவா்களுக்கு அபராதம்
திருவண்ணாமலை மாவட்டம், செங்கத்தில் முகக் கவசம் அணியாதவா்களுக்கு பேரூராட்சி நிா்வாகத்தினா் அபராதம் விதித்தனா்.
திருவண்ணாமலை மாவட்டம், செங்கத்தில் முகக் கவசம் அணியாதவா்களுக்கு பேரூராட்சி நிா்வாகத்தினா் அபராதம் விதித்தனா்.
செங்கம் பேரூராட்சிக்கு உள்பட்ட பகுதியில் தற்போது கரோனா தொற்று அதிகரித்து வருவதால், பொதுமக்கள் கட்டாயம் முகக் கவசம் அணிந்துதான் வெளியில் வரவேண்டும் என அரசு உத்தரவிட்டது.
அதைத்தொடா்ந்து, பேரூராட்சி செயல் அலுவலா் லோகநாதன் உத்தரவின் பேரில், பணியாளா்கள் நகரின் பல்வேறு பகுதிகளில் சனிக்கிழமை தீவிரமாகக் கண்காணித்து முகக் கவசம் அணியாதவா்களுக்கு ரூ.200 அபராதம் விதித்தனா்.
பின்னா் கரோனாவின் தாக்கம் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.