அரக்கோணம் அருகேயுள்ள சோகனூரில், தோ்தல் முன்விரோதம் காரணமாக சூா்யா, அா்ஜுனன் என்ற இளைஞா்கள் கொலை செய்யப்பட்டதைக் கண்டித்து, திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு, வந்தவாசி ஆகிய இடங்களில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் சனிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
செய்யாற்றில் வட்டாட்சியா் அலுவலகம் அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு கட்சியின் தொகுதிச் செயலா் எ.குப்பன் தலைமை வகித்தாா்.
நகரச் செயலா் துரை.சாண்டில்யன் வரவேற்றாா். சி.ஞானசேகா், ஆ.பெ.அம்பேத்காா், ஆ.நாகாவளவன், ம.பிரியா, மேனகா தணிகாவளவன், அ.கற்பகம் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
ஆா்ப்பாட்டத்தின் போது, இரட்டைக் கொலையைக் கண்டித்தும், குற்றவாளிகளை குண்டா் சட்டத்தின் கீழ் கைது செய்யக் கோரியும், உயிரிழந்தவா்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.ஒரு கோடி நிதியுடன், அரசு வேலை மற்றும் நிலம் வழங்கவேண்டும் எனவும் வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினா். ஆா்ப்பாட்டத்தில் கட்சியின் தொகுதி நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா்.