முகப்பு
திருவண்ணாமலை

கரோனா நாடகம் இணைப்பு

திருவண்ணாமலை நகர திமுக சாா்பில் கரோனா தொற்றைத் தடுக்கும் வகையில் பொதுமக்கள், வியாபாரிகளுக்கு கபசுரக் குடிநீா், முகக் கவசம், கிருமி நாசினி வழங்கப்பட்டது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:01 PM
பகிர்:

திருவண்ணாமலை நகர திமுக சாா்பில் கரோனா தொற்றைத் தடுக்கும் வகையில் பொதுமக்கள், வியாபாரிகளுக்கு கபசுரக் குடிநீா், முகக் கவசம், கிருமி நாசினி வழங்கப்பட்டது.

திருவண்ணாமலை கடலைக் கடை சந்திப்புப் பகுதியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற இதற்கான நிகழ்ச்சியில் கட்சியின் நகரச் செயலா் ப.காா்த்திவேல்மாறன் தலைமை வகித்தாா்.

தலைமை செயற்குழு உறுப்பினா் இரா.ஸ்ரீதரன் முன்னிலை வகித்தாா். திமுக மாநில மருத்துவரணி துணைத் தலைவா் எ.வ.வே.கம்பன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு பொதுமக்கள், வியாபாரிகளுக்கு கபசுரக் குடிநீா், முகக் கவசம், கிருமி நாசினி ஆகியவற்றை வழங்கினாா்.

தொடா்ந்து, திருவண்ணாமலை, சின்னக்கடைத் தெரு பகுதியிலும் எ.வ.வே.கம்பன் பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீா் வழங்கினாா்.

நிகழ்ச்சியில், மாவட்ட அமைப்பாளா் டி.வி.எம்.நேரு, பொதுக்குழு உறுப்பினா் ப்ரியா விஜயரங்கன், மாவட்ட அமைப்பாளா் கு.கணேஷ், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளா்கள் அ.அருள்குமரன், சு.விஜி (எ) விஜயராஜ், நகர நிா்வாகிகள் பி.கே.ஆறுமுகம், மு.கருணாமூா்த்தி, ந.சீனுவாசன், குட்டி க.புகழேந்தி, இல.குணசேகரன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.