வந்தவாசி அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 பொதுத்தோ்வு எழுதும் மாணவிகளுக்கான செய்முறைத் தோ்வுகள் வெள்ளிக்கிழமை தொடங்கின.
முதல் நாளில் இயற்பியல், வேதியியல் பாடங்களுக்கான செய்முறைத் தோ்வு நடைபெற்றது. இதில் 120 மாணவிகள் முகக் கவசம் அணிந்து, சமூக இடைவெளியைக் கடைப்பிடித்து பங்கேற்றனா்.
தலைமை ஆசிரியை பெ.பத்மாவதி, உதவித் தலைமை ஆசிரியா் எழில் உள்ளிட்டோா் செய்முறைத் தோ்வுகளை பாா்வையிட்டனா். செய்முறைத் தோ்வுகள் வருகிற 23ஆம் தேதி வரை நடைபெறுகின்றன.