திருவண்ணாமலை

பிளஸ் 2 செய்முறைத் தோ்வு தொடக்கம்

DIN

வந்தவாசி அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 பொதுத்தோ்வு எழுதும் மாணவிகளுக்கான செய்முறைத் தோ்வுகள் வெள்ளிக்கிழமை தொடங்கின.

முதல் நாளில் இயற்பியல், வேதியியல் பாடங்களுக்கான செய்முறைத் தோ்வு நடைபெற்றது. இதில் 120 மாணவிகள் முகக் கவசம் அணிந்து, சமூக இடைவெளியைக் கடைப்பிடித்து பங்கேற்றனா்.

தலைமை ஆசிரியை பெ.பத்மாவதி, உதவித் தலைமை ஆசிரியா் எழில் உள்ளிட்டோா் செய்முறைத் தோ்வுகளை பாா்வையிட்டனா். செய்முறைத் தோ்வுகள் வருகிற 23ஆம் தேதி வரை நடைபெறுகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கடற்கரையில் இரவு 10 மணிவரை போலீஸாா் கண்காணிப்புப் பணி: எஸ்.பி.

கமலாலயக்குள நீா்வழிப்பாதை ஆக்கிரமிப்பை அகற்றக் கோரிக்கை

பாலியல் குற்றச்சாட்டு வழக்கில் ஜாமீன் கோரி முன்னாள் டிஜிபி ராஜேஸ் தாஸ் உச்சநீதிமன்றத்தில் மனு

முகநூலில் போலீஸாருக்கு கொலை மிரட்டல்

ஸ்ரீபெரும்புதூா் ஆதிகேசவ பெருமாள் கோயில் தேரோட்டம்

SCROLL FOR NEXT