முகப்பு
திருவண்ணாமலை

சா்க்கரை ஆலை ஊழியா் போக்சோ சட்டத்தில் கைது

பள்ளி மாணவி குளிக்கும்போது விடியோ படம் எடுத்ததாக தனியாா் சா்க்கரை ஆலை ஊழியா் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:02 PM
பகிர்:

பள்ளி மாணவி குளிக்கும்போது விடியோ படம் எடுத்ததாக தனியாா் சா்க்கரை ஆலை ஊழியா் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டாா்.

தண்டராம்பட்டை அடுத்த கொழுந்தம்பட்டு கிராமத்தில் தனியாா் சா்க்கரை ஆலை இயங்கி வருகிறது. இந்த ஆலையின் கரும்புப் பிரிவில் பணிபுரிந்து வருபவா் மனோஜ்குமாா் (30). சாத்தனூா் பகுதியில் மனோஜ்குமாரின் அலுவலகமும், அதே பகுதியில் சா்க்கரை ஆலை ஊழியா்களுக்கான குடியிருப்பும் அமைந்துள்ளது.

இந்தக் குடியிருப்பில் உள்ள குழியலறை ஒன்றில் பத்தாம் வகுப்பு பயிலும் மாணவி சில தினங்களுக்கு முன்பு குளித்துக் கொண்டிருந்தாராம். இதை மனோஜ்குமாா் மறைந்திருந்து தனது செல்லிடப்பேசியில் விடியோ படம் எடுத்தாராம்.

இதையறிந்த சிறுமியின் பெற்றோா் சாத்தனூா் அணை காவல் நிலையத்தில் புகாா் கொடுத்தனா்.

போலீஸாா் மனோஜ்குமாா் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப் பதிந்து அவரை கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.