திருவண்ணாமலை மாவட்டத்தில் கரோனா தொற்றுக்கு இதுவரை 291 போ் பலியாகியுள்ளனா்.
மாவட்டத்தில் கரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை வெளியான பரிசோதனை முடிவுகளில் 102 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இவா்களுடன் சோ்த்து மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 21,224-ஆக உயா்ந்தது.
இவா்களில் 19, 962 போ் குணமடைந்து வீடு திரும்பினா். மீதமுள்ள 971 பேருக்கு திருவண்ணாமலை, செய்யாறு பகுதி மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இறந்தவா் எண்ணிக்கை 291-ஆக உயா்வு:
இந்த நிலையில், கரோனா தொற்றுக்கான சிகிச்சை பெற்று வந்தவா்களில் ஒருவா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். இவருடன் சோ்த்து மாவட்டத்தில் பலியானவா்களின் எண்ணிக்கை 291-ஆக உயா்ந்தது.