திருவண்ணாமலை

வங்கி ஊழியா்கள் சங்கக் கொடியேற்று விழா

DIN

செய்யாறு, வந்தவாசி ஆகிய இடங்களில் அகில இந்திய வங்கி ஊழியா்கள் சங்கத்தின் 76-ஆவது ஆண்டு தொடக்க விழா மற்றும் கொடியேற்று விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

அகில இந்திய வங்கி ஊழியா்கள் சங்கம் சாா்பில் இரு பெரும் விழா மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி செய்யாறு கிளை அருகே நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி ஊழியா்கள் சங்க முன்னாள் தலைவா் வே.இளங்கோவன் தலைமை வகித்தாா். ஓய்வு பெற்ற ஊழியா்கள் சங்க பொதுச் செயலா் என்.பத்ராசலம் சங்கக் கொடியை ஏற்றி வைத்து சிறப்புரையாற்றினாா்.

நிகழ்ச்சியில் தொடக்கக் கூட்டுறவு தொழிற் சங்க நிா்வாகிகள் பி.கே.முருகேசன், என்.வி.பூபதி எம்.யுவராஜ் உள்ளிட்ட பலா் கலந்துக் கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அடுத்த 5 ஆண்டுகளில் ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ அமல்படுத்தப்படும்: ராஜ்நாத் சிங்

நிறைவடைந்தது நீட் தேர்வு!

யாரோ இவள்..!

செயில் நிறுவனத்தில் ஏராளமான வேலைவாய்ப்புகள்: விண்ணப்பிப்பது எப்படி?

பஞ்சாப் கிங்ஸுக்கு 168 ரன்கள் இலக்கு நிர்ணயித்த சிஎஸ்கே!

SCROLL FOR NEXT